புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டில் உள்ள தர்மராஜ் பிள்ளை நகராட்சி பள்ளியில் இன்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பழமை பொருந்திய தர்மராஜ் பிள்ளை பள்ளியில் தற்பொழுது மாணவர்கள் அதிக அளவில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.