திருவேற்காடு அம்மன் கோயிலில் சமபந்தி : அமைச்சர் பங்கேற்பு

ஆர்.எஸ். எஸ் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுமா அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி? வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி புகைப்படம் எடுக்கச் சொன்ன பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றச் சொல்லுவாரா?

Update: 2024-08-16 05:33 GMT
ஆர்.எஸ். எஸ் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுமா அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி? வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி புகைப்படம் எடுக்கச் சொன்ன பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றச் சொல்லுவாரா? 78 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் சமபந்தி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் சமபந்தியில் உணவு பரிமாறிய அமைச்சர் மக்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலயத்திலும் சமூக நீதி என்ற நிலையில் தான் முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது என்றார்.மேலும் பள்ளி மாணவர்களின் புத்தக விலை உயர்வு சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.இது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி புகைப்படம் எடுக்கச் சொன்ன பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றச் சொல்லுவாரா?அப்படி செய்தால் அது சரியாக இருக்கும் அதை பிரதமர் செய்வாரா என்றார்.

Similar News