திருமயம் பாப்பாவயல் அங்கன்வாடியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் புவியரசன், ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.