செல்லாண்டியம்மன் கோவிலில் மண்டல பூஜை..!

சங்ககிரி:அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் 16ஆம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....

Update: 2024-09-22 16:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை யில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 16ஆம் நாள் மண்டல சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன்,ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர் சுவாமிகளுக்கு செப்.6 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 16ஆம் நாளையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சந்தைபேட்டை, சங்ககிரி நகர், வி.என்.பாளையம், சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர்.

Similar News