ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த பழனிராஜ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், பழனிராஜ், அதே ஊரை சேர்ந்த பிரபா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், அப்பெண்ணை 2ஆவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், புவனேஸ்வரி நேற்றிரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.