ஆவுடையார்கோவிலை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், நேற்று மைசூருக்கு சென்று விட்டு ஆலங்குடி செல்லும் வழியில் பாத்தம்பட்டி அருகே வந்த போது மயில் ஒன்று பறந்தது. இதனால், நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டபோது, அவரது மகள் வீரலட்சுமி (28) தூக்கி வீசப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.