பழுதடைந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம்

முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் பணி துவங்கியது

Update: 2024-08-23 12:46 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சின்னிய கவுண்டன் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வித்ய பிரகாஷ் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.கோரிக்கையின் அடிப்படையில் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

Similar News