கிராவல் மண் ஏற்றிய டிராக்டர், டிப்பர் பறிமுதல்

பறிமுதல்

Update: 2024-08-25 05:45 GMT
எஸ்.ஒகையூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றியது தொடர்பாக, ஜே.சி.பி., மற்றும் டிராக்டர், டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 7:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுட்டனர்.அப்போது, எஸ்.ஒகையூர் ஏரியில் டிராக்டர், டிப்பரில் சிலர் கிராவல் மண் ஏற்றியது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து, ஜே.சி.பி., மற்றும் 1 யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த பதிவெண் இல்லாத டிராக்டர், டிப்பரை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News