கருமியம்மன் அய்யனார் கோவில் மகமேர் வீதியுலா

வீதியுலா

Update: 2024-08-27 01:49 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா பு. கொணலவாடி கிராமத்தில் கருமியம்மன் அய்யனார் கோவில் மகமேர் மற்றும் தேர் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினசரி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை மற்றும் இரவு வீதி உலா நடந்த வருகிறது. நேற்று முன்தினம் இரவு கருமியம்மன் அய்யனார் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 60 அடி உயர மகமேர் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று மதியம் 2 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

Similar News