நூதன முறையில் விஜயகாந்த் படத்தை வரைந்த ஆசிரியர்

விஜயகாந்த்

Update: 2024-08-27 02:05 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு.. விஜயகாந்த் ஒரு கடவுள் என்பதை குறிக்கும் விதமாக தன் "வெறும் கையில் கற்பூரம் ஏந்தி" கற்பூரம் எரிந்து முடிவதற்குள் விஜயகாந்த் படத்தை வரைந்தார். விஜயகாந்த் ஒரு கடவுள் என்பதை சில நிகழ்வுகள் மூலம் அறியலாம், மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டுச்செல்லும் போது அவரது பூத உடலை சுற்றி கருடன் வட்டமடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஆக விஜயகாந்த் தெய்வம் தான் என்பதை குறிக்கும் விதமாக, விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு, ஓவியர் செல்வம் தன் "வெறும் கையில் கற்பூரம் எரிய" அதே கை விரல்களால் மார்க்கரை பிடித்துக் கொண்டு விஜயகாந்த் படத்தை 1 நிமிடம், 20 செகண்டில் "கையில் கற்பூரம் ஏந்தி" தீபாராதனை காட்டியவாரே ஓவியர் செல்வம் வரைந்தார்

Similar News