எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து நகர அதிமுகவினர் அண்ணாமலை உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து நகர அதிமுகவினர் அண்ணாமலை உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-27 14:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து நகர அதிமுகவினர் அண்ணாமலை உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதாக கூறி தமிழக முழுவதும் அதிமுகவினர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் நகர அதிமுகவினர் நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினர் தங்கள் பைகளில் வைத்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எடுத்து அண்ணாமலை ஒழிக என்ற முழக்கங்கள் எழுப்பி அந்த உருவப் படத்தை செருப்பால் அடித்து கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.‌ அதிமுகவினரின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு டிஎஸ்பி காயத்ரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌

Similar News