விநாயகர் சிலை அமைப்பாளர்கள் ஆலோசனை

ஆலோசனை

Update: 2024-08-28 04:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலபந்தல், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் காரி பாரி திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வரவேற்றார்.விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விநாயகர் சிலையை நிறுவுவது, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரின் அறிவுறுத்தலை பின்பற்றுவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது. சிலை அமைப்பாளர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Similar News