அதிமுக நிர்வாகி மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி

அதிமுக நிர்வாகி மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி

Update: 2024-08-28 15:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகரில் அதிமுக நிர்வாகி மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.. விருதுநகர் ஏழாவது வார்டு கழகச் செயலாளர் நகர இலக்கிய அணி தலைவருமான சுந்தர பாண்டியன் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அதிமுக நிர்வாகி சுந்தரபாண்டியனின் மறைவிற்கு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி அதிமுக நிர்வாகி சுந்தரபாண்டியனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.. மேலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் படி அதிமுக நிர்வாகி சுந்தரபாண்டியனின் மகன்களின் கல்விச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Similar News