தேரழுந்தூரில் உறியடி திருவிழா

தேரழுந்தூரில் உள்ள ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு உரியடி திருவிழா பெருமாள் தாயார் உரியடி கிருஷ்ணருடன் வீதிபுறப்பாடு நடைபெற்றது

Update: 2024-08-28 18:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் பழமைவாய்ந்த ஶ்ரீஆமருவியப்பன் திருக்கோயில் உள்ளது. 108 வைனவ திவ்ய தேசங்களில் 10வது திவ்யதேசமாக போற்றப்படும் இக்கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு உரியடி திருவிழா பெருமாள் தாயார் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஶ்ரீ ஆமருவியப்பன் உபயநாச்சயாருடனும் உரியடி கண்ணனுடனும் புறப்பட்டு வீதியுலாவாக கீழவீதி எழுந்தருளினர். அங்கு உரியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவீதியுலா நடைபெறற்து. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Similar News