தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா

வீதியுலா

Update: 2024-08-30 04:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று சுவாமி தங்க பல்லக்கில் வீதியுலா நடந்தது.திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோற்சவ விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு வேணுகோபாலன் குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தங்க பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 28-Aug-2024 11:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாய்மொழி சேவை, சாற்றுமறை நடந்தது. இரவு 7:30 மணிக்கு வேணுகோபாலன் பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News