சத்துணவு ஊழியர் கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-30 23:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வள்ளி, வட்ட துணைத் தலைவர் அன்பரசி, ஒன்றிய செயலாளர் சத்யா முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் வீரபுத்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் வேலு ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.

Similar News