மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

போட்டி

Update: 2024-08-31 00:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஐ.ஜே.கே., சார்பில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.திருக்கோவிலுார் தொகுதி ஐ.ஜே.கே., சார்பில், கட்சியின் நிறுவனத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலுார் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சுனில் குமார், ரிங்கு, கோபால், தமிழ் சங்கத் தலைவர் உதியன், திருக்கோவிலுார் வள்ளலார் சங்க தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஐ.ஜே.கே., மாவட்ட செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பொன்முடி, மகளிர் அணி நிர்வாகி பாலமுருகன், இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளியின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

Similar News