பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

கூட்டம்

Update: 2024-09-01 03:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சூளாங்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கோமதி சுரேஷ், ஆசிரியர்கள் அலெக்சாண்டர், ராதாகிருஷ்ணன், தமிழ்செல்வி, சுகுணா, கித்தேரி, ரம்யா, ரேவதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் வரவேற்றார்.கூட்டத்தில், 24 பதவி களுக்கு தேர்தல் நடத்தப் பட்டது. தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை முன்மொழிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வெற்றி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பதவி பிரமாணம் செய்து வைத்து, 1,000 ரூபாய் செலுத்தி பள்ளி புரவலராக இணைந்து கொண்டார். வெற்றி பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம், செயல்பாடுகள், பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுடைய கற்றல் அடைவு குறித்து விளக்கி பேசப்பட்டது. ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Similar News