புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

Update: 2024-09-01 11:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேலம் சாலை ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் ,அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு மாநில கழக கூட்டுறவு செயலாளர் இரா.குமார் தலைமை தாங்கினார் . கட்சியின் நிறுவனரும் ,பொதுச் செயலாளருமான மருத்துவர் வி.செந்தில் குமார் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில கழக அமைப்புச் செயலாளர் பி.சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.நாகராஜ் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் ,மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெகநாதன், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், பள்ளிபாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சேகர் மற்றும் மகளிர் அணி இளைஞரணி நிர்வாகிகள் முன்னணி பொறுப்பாளர்கள் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது .

Similar News