ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிராம மக்கள் மனு

சுந்தரமுடையான் டி. என். குடியிருப்பு கிராம மக்கள் சுடுகாடு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

Update: 2024-09-03 09:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் கிராமம் டி. என். குடியிருப்பில் உள்ள கிராம மக்கள் சுடுகாடு வேண்டி மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர் மனு கொடுக்க வந்தனர் அப்போது பல ஆண்டுகளாக நாங்கள் இந்த ஊரில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம் இதுனால் வரை எங்களுக்கு சுடுகாடு இல்லை எங்கள் வீடுகளில் இரக்கும் பிணங்களை சொந்தக்காரங்க இடத்தில் போய் அடக்கம் செய்யும் நிலையில் இருக்கிறோம்.சில நேரங்களில் அவர்களும் ஒத்துக்கொள்வதில்லை மேலும் 10 ஆண்டுகளாக போராடியும் இதுவரையும் எங்களுக்கு சுடுகாடு கிடைக்கவில்லை ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன அதில் ஒரு இடத்தில் எங்களுக்கு சுடுகாடு அமைத்து தருமாறு பலமுறை முறையிட்டு வந்தோம் கிடைக்கவில்லை தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோனிடம் மனுக்கொடுத்தோம் பரிசீலனை செய்வதாக கூறினார். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் ரோடு மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

Similar News