வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

Update: 2024-09-03 14:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவில் வரும் 7 ஆம் தேதி முதல் 9ஆம் தேதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டு கரைத்து விட வேண்டும் காவல்துறை, மின்வாரியம் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரியிடம் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. இதில் குளித்தலை, லாலாபேட்டை, தோகைமலை, மாயனூர், பாலவிடுதி, சிந்தாமணி பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள், இந்து அமைப்பைச் சேர்ந்த விழா கமிட்டியாளர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News