நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்

குமாரபாளையத்தில் இரு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றனர்.

Update: 2024-09-04 10:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றனர். கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதன்படி குமாரபாளையம் நாராயண நாகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்தி ஆகிய இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News