அரசு மேல்நிலை பள்ளியில் கழிவறை கட்டடம் திறப்பு

திறப்பு

Update: 2024-09-08 04:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் கழிவறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.இப்பள்ளியில், 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' திட்டம் மற்றும் தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக மகளிர் கழிவறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பாக்யம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், குவாலிடெஸ்ட் இந்தியா நிறுவன துணைத் தலைவர் பிரபு லோகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை சிவபிரேமா வரவேற்றார். கலெக்டர் பிரசாந்த் புதிய கழிவறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஊர் பொது மக்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்றனர்.

Similar News