மணல் கடத்தலில் ஈடுபட்டவர் வானங்கள் பறிமுதல்

பறிமுதல்

Update: 2024-09-08 18:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா மணல் கள்ளச்சாராயம் மற்றும் பாலியல் தொழிலில் உட்படுத்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அதன் பேரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜுவ் சதுர்வேதி அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் வளையம்பட்டு விரியூர் மூரார்பாளையம் ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த பழையனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஒன்றிய கவுன்சிலரின் கணவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவரை அதிரடியாக கைது செய்த சங்கராபுரம் காவல்துறையினர் அவரிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News