வாகனம் மோதி தொழிலாளி பலி!

விபத்து செய்திகள்

Update: 2024-09-13 04:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை ஒன்றியம் மேப்பூதகுடியை சேர்ந்தவர் இந்திரன்(45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் மணப் பாறை சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். ராஜாளிப்பட்டி இரட்டை பாலம் அருகே வந்தபோது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம டைந்த இந்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News