சாலை விபத்தில் ஒருவர் பலி!

விபத்து செய்திகள்

Update: 2024-09-14 03:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை:விராலிமலை ஒன்றியம் ராஜகிரியை சேர்ந்தவர் இளையராஜா(40). இவர் நேற்று தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரர் சிவக்குமார் (40) என்பவருடன் பைக்கில் புதுக்கோட்டை சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். கூத்தக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே மலைக்குடிபட்டியில் இருந்து விராலிமலையை நோக்கி தக்காளி ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இளையராஜா படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். சிவக்குமார் காயத்துடன் விராலிமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News