நாளை அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம்.

நாளை அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம்.

Update: 2024-09-20 02:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாளை அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆண்டி செட்டிபாளையம், ராஜபுரம், ரங்கநாதபுரம், தாளப்பட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செப்டம்பர் 21 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தென்னிலை, கோடந்தூர், காட்டுமன்னூர், கூடலூர், பெரிய திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், ராஜபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன தாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, புஞ்சை காளக்குறிச்சி, தொக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட காருடையான் பாளையம், பரமத்தி, நெடுங்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தாளப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஜவுளி பூங்கா, ஆறு ரோடு, மணல்மேடு, ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் நாளை செப்டம்பர் 21 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், பொது மக்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Similar News