காரையூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியில் கண்மாய் மணல் கடத்தப்படுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிப்பர் லாரியை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கண்ணதாசனை கைது செய்தும், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.