புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குமாரபாளையம் புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-09-16 13:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா முகூர்த்தகால் நடுதலுடன் நேற்றுமுன்தினம் துவங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களின் பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Similar News