விருத்தாசலத்தில் நாளை மின் நிறுத்தம்

செயற்பொறியாளர் தகவல்

Update: 2024-09-19 16:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டம் பூதாமூரில் அமைந்துள்ள  துணை மின்நிலையத்தில் நாளை 21ந் தேதி சனிக்கிழமை அன்று பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கண்டியாங்குப்பம், முதனை ஆகிய துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுவதுடன், விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடைவீதி, சேலம் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம் மற்றும் கண்டியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News