நேர்மை அங்காடி திறப்பு விழா

ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது

Update: 2024-09-19 17:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் ரோட்டரி சங்கம் மற்றும் ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி ஸ்கூல் இணைந்து நடத்திய நேர்மை அங்காடி நிகழ்ச்சி புதுக்கூரைப்பேட்டை ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது. விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ஜார்ஜ் யுவராஜ், முதல்வர் லிடியா ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு நேர்மை அங்காடியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கி பேசினார். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார். இதில் நேர்மை அங்காடியின் பயன், ஆளில்லா நேர்மை அங்காடி அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News