மல்லசமுத்திரத்தில் நாளை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

முகாமில் கலந்துகொள்ள விரும்பும், வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in, http://www.tnprivatejobs.tn.gov.in ஆன்லைன் மூலம் பதிவு செய்திட வேண்டும். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ள 6380369124

Update: 2024-09-20 09:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மல்லசமுத்திரத்தில் நாளை (செப்டம்பர் 21) சனிக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாளை செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர்.டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர். தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது.முகாமில் கலந்துகொள்ள விரும்பும், வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in, http://www.tnprivatejobs.tn.gov.in ஆன்லைன் மூலம் பதிவு செய்திட வேண்டும். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள 04286- 222260 அல்லது 6380369124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News