ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-09-20 10:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள வால்காட்டுபுதூரில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் 10,000- லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கவும், இதே போல ஜெகதாபி ஊராட்சியில் உள்ள பொம்மனூத்துபட்டியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்காக அந்தந்த பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்று, அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News