திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு இன்று தங்ககாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு இன்று தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2024-09-21 09:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு இன்று தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு கோ சேவை தரிசனம் அதையடுத்து கால சாந்தி பூஜை, உதய கருட சேவா மற்றும் அன்னதான சேவா ஆகிய பூஜைகள் நடைபெற்றது. உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வ செழிப்போடு வாழ இன்று ஸ்ரீ வீரராகவ பெருமாள் தங்கக்காப்பு அலங்காரத்தில்   காட்சியளித்தார். உற்சவமூர்த்தி கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் இன்று பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News