சிறுவன் அணிந்திருந்த பூணூலை அறுத்த கும்பல்

சிறுவனிடம் பூணூல் அறுப்பு

Update: 2024-09-22 02:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர டிவிஎஸ் நகரை சேர்ந்த 12 வயது சிறுவன் நேற்று மாலை தியாகராஜநகர் 12வது தெற்கு தெருவில் உள்ள ஆஸ்திக சமாஜத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுவன் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பேரில் பெற்றோர் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரை தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News