கண்ணமங்கலத்தில் உலக அமைதி தின விழா

உள்முக அமைதியே உலக அமைதிக்கு வழிவகுக்கிறது பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் பேச்சு

Update: 2024-09-22 10:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி செப்.22 கண்ணமங்கலத்தில் உள்ள ஹார்ட்புல்னெஸ் யோகா தியான மையத்தில் உலக அமைதி தினத்தையொட்டி உலக அமைதிக்காக சர்வ சமய தொடர் பிரார்த்தனை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால் தலைமை தாங்கினார். கொளத்தூர் ஊராட்சி தலைவர் கலைவாணி ஆனந்தன், பணிநிறைவு தலைமையாசிரியர் கார்த்திகேயன், இயற்கை விவசாயி ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதீஷ் வரவேற்றார். கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை ெதாடங்கி வைத்து பேசினார். அப்போது, யோகா மற்றும் தியானம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், உள்முக அமைதியிலிருந்து உலக அமைதிக்கு வழி வகுக்கிறது என கூறினார். பின்னர் சிறந்த மாணவியாக தேர்தெடுக்கப்பட்ட ரத்தினமாலாவிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முடிவில் மேலாளர் தமயந்தி நன்றி கூறினார். இதேபோல் படவேடு சவுடேஸ்வரியம்மன் கோயில் அருகே உள்ள யோகா தியான மையத்திலும் மாலையில் உலக அமைதிக்காக சர்வ சமய பிரார்த்தனை நடந்தது.

Similar News