அரசகுளம் கீழ்பாதி பகுதியில் நான்கு பேர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-22 15:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் அரசகுளம் கீழ்பாதி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனி பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு விற்பனையில் ஈடுபட்ட சேக் முகமது (40), செந்தில்குமார் (52), துரைமுருகன் (47), சுரேஷ் (40) ஆகிய நால்வரைக் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News