திருமயம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் கிராமம் வளர்ச்சி பெறும் என திருமயம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.