தீபாவளி முன்னிட்டு கைத்தறி ஆடை விற்பனை நிலையத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தீபாவளி-2024 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்

Update: 2024-09-23 11:20 GMT
நாமக்கல் மாநகராட்சி, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தீபாவளி 2024 30% சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழா காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்தாண்டு தீபாவளி 2024-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ்-ல் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள் மற்றும் அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபில்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், பிரிண்டட் படுக்கை விரிப்புகள் மற்றும் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில்அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும். தீபாவளி 2024 பண்டிகைக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் விற்பனை நிலையத்திற்கு ரூ.92.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (இரகம் & பகிர்மானம்) (பொ) எம்.பாலசுப்ரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் பெ.செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News