திருப்பதி கோவில் லட்டில் மாட்டு கொழுப்பு-நெல்லையில் பிரார்த்தனை

நெல்லையில் பிராத்தனை

Update: 2024-09-24 03:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருமலை தேவஸ்தான கோரிக்கையை ஏற்று நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நேற்று பெண்கள் தங்களது வீடுகள் முன்பு விளக்கேற்றி ஓம் நமோ நாராயணா மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் திருப்பதி கோவிலில் ஏற்பட்ட தோஷத்தால் பொதுமக்கள் யாரும் பாதிப்படைந்து விடக் கூடாது என்றும் பிரார்த்தனை செய்தனர்.

Similar News