மருந்தாளுனர்கள் தின பேரணி

குமாரபாளையத்தில் மருந்தாளுனர்கள் தின பேரணி நடந்தது.

Update: 2024-09-25 13:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மருந்தாளுனர்கள் தின பேரணி நடந்தது.ஆண்டுதோறும் செப். 25 மருந்தாளுனர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று குமாரபாளையம் முனிராஜா கல்வி நிறுவனம் சார்பில் மருந்தாளுனர்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு  தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் தவமணி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,  பேரணியை தொடங்கி வைத்தனர். கோஷங்கள் போட்டவாறும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறும் மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். முதல்வர் செந்தில்குமார் உள்பட பேராசிரியர்கள், கவுன்சிலர்கள் உள்பட  பலரும் பங்கேற்றனர்.

Similar News