பெண்ணாடம் அருகே சிறுமி கர்ப்பம்

வாலிபர் போக்சோவில் கைது

Update: 2024-09-30 17:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சின்ன கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சாமு (29). இவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சாமு மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News