ராமநாதபுரம் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றுவதற்கு பாராட்டு

கீழக்கரை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை 2024 விழிப்புணர்வு வளர்ச்சியை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

Update: 2024-10-01 12:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கீழக்கரை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 14. 9. 2024 முதல் நடைபெற்று வருகிறது இதில் பங்கேற்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்கிய தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களுக்கு அவர்களின் பணியினை பாராட்டி கேடயமும் பாராட்டு சான்றிதழும் வழங்கும் விழா கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளையும் மரியாதைக்குரிய நகர்மன்ற தலைவர் நகர மன்ற துணைத் தலைவர் நகராட்சி ஆணையாளர் சுகாதார ஆய்வாளர் ஆகியோர்கள் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

Similar News