காப்பீட்டுக் கழக ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் மாநகராட்சி யில் உள்ள காந்தி சிலைக்கு காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Update: 2024-10-02 11:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட துணை தலைவர் வாஞ்சிநாதன், தலைவர் ஜனகன், கிளைச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஈஸ்வர அல்லா தேரா நாம். என்ற சொல்லி மந்திர சொல்லாக ஏற்று நாம் செயல்படுவோம். இந்திய நாட்டின் இறையாண்மையை கண்ணில் இமைபோல் காப்பாற்றுவோம். உங்கள் நெஞ்சில் வடிந்த குறுதியால் எங்கள் இதயத்து ஈரமாக்குவோம். மதவெறி கடந்து மனித நேயம் நாடுவோம். மந்திரச் சொல்லாக ஏற்று நடப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

Similar News