ப்ரையண்ட் பார்க்கில் தூய்மை பணி செய்த காங்கிரஸ் கட்சியினர்

கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் அருகில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணி செய்த காங்கிரஸ் கட்சியினர்

Update: 2024-10-02 11:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்தநாள். முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள். பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் என தலைவர்களின் நாளை முன்னிட்டு ப்ரையண்ட் பார்க் அருகில் கொடைக்கானல் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் காங்கிரசார் ஈடுபட்டனர் இதையடுத்து தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்கள் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News