மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்

மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்

Update: 2024-10-03 19:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வத்தலக்குண்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை பா.ஜ .,வினர் வழங்கினர்.மஞ்சளாறு தெருவில் செப். 28ல் பெய்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலக்கோட்டை பா.ஜ ., தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் கருப்புசாமி சார்பில் 5 கிலோ அரிசி, பிரட், போர்வை வழங்கப்பட்டன. மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வினோதினி, வடக்கு மண்டல தலைவர் அன்புச்செழியன், தெற்கு மண்டல தலைவர் செந்தில பங்கேற்றனர்.

Similar News