ராமநாதபுரம் பொதுமக்கள் மற்றும்காவல்துறை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

இராமநாதபுரத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2024-10-06 07:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் ராமநாதபுரம் 5 வது வார்டுக்கு உட்பட்ட என்.ஆர். மஹாலில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், பஜார் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பொதுமக்களிடையே காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார், இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News