வடமதுரை: ரோடு வசதியின்றி தவித்த கிராமத்திற்கு விடிவு

வடமதுரை: ரோடு வசதியின்றி தவித்த கிராமத்திற்கு விடிவு

Update: 2024-10-06 08:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அய்யலுார் குப்பான்நாயக்கர் களத்திற்கு ரூ.44 லட்சத்தில் புதிதாக தார் ரோடு அமைக்கப்படுகிறது.அய்யலுார் கடவூர் பிரிவில் இருந்து பாலவிடுதி செல்லும் ரோட்டில் இருக்கும் கருவார்பட்டியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் குப்பான்நாயக்கர் களம் கிராமம் உள்ளது. இக்கிராமம் தோன்றி தற்போது வரை 60 ஆண்டுகளாக வண்டிப்பாதை மட்டுமே உள்ளது. தார் ரோடாக மாற்றப்படாத நிலையில் மழை நேரத்தில் அதிக சிரமம் உள்ளது. புதிதாக தார் ரோடு அமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ரோடு பணியை நேற்று பூமி பூஜை செய்து பேரூராட்சி தலைவர் கருப்பன் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் அன்னலட்சுமி, கவுன்சிலர் நித்யாநாகராஜன் பங்கேற்றனர்.

Similar News