சத்தியமங்கலத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாரல் பறிமுதல் ஒருவர் கைது

சத்தியமங்கலத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாரல் பறிமுதல் ஒருவர் கைது

Update: 2024-10-19 12:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாரல் பறிமுதல் ஒருவர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் சம்மந்தமாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அங்கணக்கவுண்டன்புதூர் பெரியார்நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுப்பட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் விசாரணை செய்ததில்,வாகனத்தின் முன்பகுதியில் பார்சல் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இருசக்கர வாகனத்தில் வந்த வசந்த் என்பவர் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், பார்சலை பிரித்து சோதனை செய்ததில், கஞ்சா மற்றும் கஞ்சா சாரல் அடங்கிய போதை பொருள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 2 ரூலட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 கிலோ 350 கிராம் கஞ்சா,மற்றும் 60 கிராம் கஞ்சா சாரலை பறிமுதல் செய்தனர்.போதைப் பொருட்களைக் கொண்டு வந்த வசந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது,இவருடன் சில கூட்டாளிகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கூட்டாளிகளான தட்சணாமூர்த்தி, விக்கி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன்,குமார், சக்திவேல், ஆகியோருக்கு சத்தியமங்கலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் பாராட்டுகள் தெரிவித்தனர். சத்தியமங்கலம் நகரத்தை, போதையில்லா நகரமாக மாற்ற பொதுமக்கள் போதைப் பொருட்கள் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Similar News