சத்தி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

சத்தி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2024-10-23 09:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி விண்ணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பழனியம்மாள். இவரது மூத்த மகன் சதீஷ்குமார் (வயது 39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.சதீஷ்குமார் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.சதீஷ்குமார் தனக்கு திருமணம் ஆகவில்லை என அடிக்கடி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்தி கோவை மெயின் ரோடு பகுதியில் சதீஷ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடும்பத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து அவரது தாய் பழனியம்மாள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News